Site icon Tamil News

வழக்கு விசாரணை தாமதம் | அபராதம் கோரும் தனுஷ்க

 

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவின் சட்டத்தரணி, நியூ சவுத் வேல்ஸ் சட்ட அதிகாரிகள் சட்டக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என நீதிமன்றத்தில் வாதத்தை சமர்ப்பித்துள்ளார்.

வழக்கு விசாரணை தொடர்ந்து தாமதமாகி வருவதால் நீதிமன்ற கட்டணத்தை உரிய அதிகாரிகளே செலுத்த வேண்டும் என தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான வழக்கு அவுஸ்திரேலியாவின் சிட்னி நீதிமன்றில் இன்று அழைக்கப்பட்ட போதே தனுஷ்கவின் சட்டத்தரணிகள் இந்த வாதத்தை முன்வைத்துள்ளனர்.

பிணை கோரிக்கை மேலும் இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டதன் காரணமாக தனுஷ்க குணதிலக்கவின் சட்டத்தரணிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

தனுஷ்க குணதிலக்க வெளிநாட்டவர் எனவும், நீண்ட காலமாக அந்நாட்டில் வழக்கு ஒன்றில் ஈடுபட்டு பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் அவரது சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version