Site icon Tamil News

ரஷ்யா மீதான போர் குற்ற வழக்கு விசாரணைகளை ஆரம்பிக்கும் ஐ.சி.சி நீதிமன்றம்!

உக்ரைன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்புடன் தொடர்புடைய இரண்டு போர்க்குற்ற வழக்குகள் குறித்த விசாரணைகளை ஆரம்பிக்க சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தேசித்துள்ளது.

ஐ.சி.சியின் வழக்கறிஞர் உக்ரைனுக்கு சென்று அங்குள்ள நிலைமைகள் குறித்து ஆராய்ந்ததன் பின்னர் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

வழக்கு விசாரணை குறித்த தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும் ஐ.சி.சியின் வழக்கறிஞர் உக்ரைன் குழந்தைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட விவகாரம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

ஆகவே இது குறித்த போர் குற்ற விசாரணைகளை ஆரம்பிக்க ஐ.சி.சி தீர்மானித்திருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

Exit mobile version