Site icon Tamil News

உக்ரைனில் 501 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் அறிவிப்பு!

உக்ரைனில் போர் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை குறைந்தது 501 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

ஐநா குழந்தைகள் தொண்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேத்தரின் ரஸ்ஸல் இது ஐநாவால் சரிபார்க்கப்பட்ட எண்ணிக்கை எனத் தெரவித்தார்.

உண்மையான எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கலாம் எனத் தெரிவித்த அவர்,  மேலும் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை கற்பனை செய்ய முடியாதது எனவும் கூறினார்.

உக்ரைனின் குழந்தைகள் மற்றும் குடும்பங்களுக்கு இது மற்றொரு சோகமான மைல்கல் என்றும் அவர் விவரித்தார்.

 

Exit mobile version