Site icon Tamil News

ரஷ்யா மீதான போர்குற்ற விசாரணை : ஐ.சி.சியின் அதிகார வரம்பை மறுக்கும் கிரெம்ளின்!

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பை அங்கீகரிக்கவில்லை என கிரெம்ளின் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் இருந்து குழந்தைகளை வலுக்கட்டாயமாக நாடுகடத்தியது, மற்றும் பொதுமக்களின் உள்கட்டமைப்பை குறைவைத்தது தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரணைகளை நடத்தும் என முன்னதாக அறிவிக்கப்பட்டது

இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கிரெம்ளின் செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ஹேக் அடிப்படையிலான நீதிமன்றத்தின் அதிகார வரம்பை மொஸ்கோ அங்கீகரிக்கவில்லை எனக் கூறினார்.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் உள்ள குறித்த நீதிமன்றம் இதுவரை போர் குற்றங்கள் தொடர்பில் 20இற்கும் மேற்பட்ட நபர்களை கைது செய்ய அல்லது வழக்கு தொடர கோரியுள்ளது.

 

Exit mobile version