Site icon Tamil News

ரஷ்யாவின் தாக்குதலால் 34 பேர் படுகாயம்!

டினிப்ரோ பிராந்தியத்தில் உள்ள பாவ்லோஹ்ராட், பகுதியில் நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில், ஐந்து குழந்தைகள் உள்பட 34 பேர் காயமடைந்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பெரும்பாலானவர்கள் எலும்பு முறிவு, வெட்டுக்காயங்கள், உள்ளிட்டவற்றுக்கு உள்ளாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம் தீவிர   சிகிச்சைப்  பிரிவில் 45 மற்றும் 55 வயதுடைய இரண்டு பெண்கள் உள்ளனர் என்று அவர் மேலும் கூறினார்.

கடந்த வெள்ளிக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில், 25 பேர் உயிரிழந்திருந்தனர். இதனையடுத்து ரஷ்யா ஏவுகணை தாக்குதல்களை முடுக்கிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version