ரஷ்யா தான் இழைத்த குற்றங்களுக்கு பணம் செலுத்த வேண்டும் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான்டெர் லயன் தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான விளாடிமிர் புடினின் படையெடுப்பு சொல்ல முடியாத துன்பத்தை ஏற்படுத்தியதாக தெரிவித்த அவர், குற்றவாளிகளை நீதிபதியின் முன் நிறுத்த வேண்டும். அதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்குலகம் முன்னெடுக்க வேண்டும் எனவும் கூறினார்.
மொஸ்கோவின் துருப்புகள் பின்வாங்கிய பிறகு வெகுஜன புதைகுழிகள், கைகள் பின்னால் கட்டப்பட்ட நிலையில், இறந்த உடல்கள் மற்றும் சித்திரவதைக்கான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சித்திரவதை, தவறான சிகிச்சை, பாலியல் வன்முறை மற்றும் சுருக்கமான மரணதண்டனைகளை ரஷ்ய படையினர் மேற்கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.