Site icon Tamil News

ரஷ்யாவிற்குள் நுழைந்த உக்ரைனிய குழு : மக்களை அச்சுறுத்தியதாக தகவல்!

உக்ரைனிய உளவுக் குழுவொன்று பிரையன்ஸ்க் பகுதிக்குள் நுழைந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்யாவின் டாஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலில், உக்ரைனிய உளவுக் குழுவானது சுஷானி கிராமத்தில் நுழைந்ததாகவும், அங்கிருந்த மக்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 50 பேர் கொண்ட குறித்த குழுவினர், வெடிகுண்டு மற்றும் துப்பாக்கிகளை பிரயோகித்ததாகவும் தெரிவிக்கப்ப்டுள்ளது. சுஷானி நகரில் ஒரு மின் துணை நிலையம், எரிவாயு நிலையமும் வெடித்துச் சிதறியதாகவும் கூறப்படடுள்ளது.

அதேநேரம் லியுபெச்சன் கிராமத்தில் பணயக்கைதிகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version