Site icon Tamil News

ரஷ்யாவால் நாடுகடத்தப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் – உக்ரைன் கோரிக்கை!

உக்ரைனில் இருந்து கொண்டு செல்லப்பட்ட குழந்தைகளை தத்தெடுக்க வேண்டாம் என உக்ரைன் துணைப் பிரதமர் ரஷ்ய குடிமக்களை எச்சரித்துள்ளார்.

இது குறித்து டெலிகிராமில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், சட்டவிரோத நடவடிக்கை பற்றி பகிரங்கமாக தற்பெருமைக் காட்டுவது அருவருப்பானது எனத் தெரிவித்துள்ளார்.

குழந்தைகள் நாடுகடத்தப்பட்டமை குறித்து 16 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளன.

இந்நிலையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து புடினுக்கு கைது வாரண்ட் பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version