பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது.
பயங்கரவாதத்திற்கு எதிரானது எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம் ஆங்கிலத்தில் எண்டி – டெரரிசம் எனக் குறிப்பிட்பட்டுள்ளது.
1979ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தற்காலிக ஏற்பாடுகளை நீக்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வது இந்த சட்டமூலத்தை தயாரிப்பதன் நோக்கமாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது