Site icon Tamil News

பெருவில் அதிர்ச்சி – காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய நபர்

பெருவில் பொது இடத்தில் முன்னாள் காதலியை உயிருடன் தீ வைத்துக் கொளுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெனிசுவேலாவைச் சேர்ந்த 19 வயதான Sergio Tarache Parra என்பவர், 18 வயதுடைய Katherine Gomez தீ வைத்து எரித்ததாகச் சந்தேகிக்கப்படுகிறது.

அந்தச் சம்பவம் பெரு தலைநகர் லீமாவில் சென்ற மாதம் 18ஆம் திகதி நடந்தது. அதற்குச் சில நாள் முன்பு தான் Gomez அவரிடமிருந்து பிரிந்ததாகக் கூறப்பட்டது.

உடலில் 60 சதவீத தீக் காயங்களுடன் Gomez மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 6 நாட்களுக்குப் பிறகு அவர் உயிரிழந்துள்ளார்.

அதன் பின்னர் Tarache கொலம்பியாவில் கைது செய்யப்பட்டார்.

Tarache கொலம்பியாவிலிருந்து பெருவிற்கு அனுப்பப்படுவார் என்று பெருவின் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பியது கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகியிருந்தது.

அவரைப் பற்றித் தகவல்கள் அளிப்போருக்கு 12,500 டொலர் வழங்குவதாகப் பெரு பொலிஸார் அறிவித்துள்ளனர்.

 

Exit mobile version