Site icon Tamil News

புதிய நியமனங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ள நாடாளுமன்றக் குழு!

இரண்டு அமைச்சுக்களுக்கான புதிய செயலாளர்கள் மற்றும் தூதுவர் ஒருவரை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் புதிய செயலாளராக டபிள்யூ. எஸ். சத்யானந்தவின் நியமனம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் புதிய செயலாளராக எம். எம். நைமுதீனின் நியமனத்துக்கு உயர் பதவிகளுக்கான குழு ஒப்புதல் அளித்துள்ளது.

அதனுடன் பிலிப்பைன்ஸிற்கான இலங்கைத் தூதுவராக கலாநிதி சானக ஹர்ஷ தல்பஹேவாவை நியமிப்பதற்கு உயர் அதிகாரிகள் குழு அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாடாளுமன்ற உயர் அதிகாரிகள் குழு அண்மையில் (04) நாடாளுமன்றத்தில் கூடியதுடன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோன் சேனவிரத்ன, அனுர பிரியதர்ஷன யாப்பா, தலதா அத்துகோரள மற்றும் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

Exit mobile version