Site icon Tamil News

பாகிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் – 23 பேர் பலி

 

பாகிஸ்தானில் உள்ள இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இது தற்கொலை குண்டுத் தாக்குதல் என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.

பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பகுதியில் அமைந்துள்ள இ
ராணுவ முகாம்தான் இத்தகைய தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது.

தாக்குதலில் உயிரிழந்தவர்களில் பலர் சிவில் உடை அணிந்திருந்தவர்கள் எனவும், அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

எனவே உயிரிழந்தவர்கள் அனைவரும் இராணுவ வீரர்களா என்பதை உறுதிப்படுத்துவது அதிகாரிகளுக்கு கடினமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தற்காலிக இராணுவ முகாமாக பாடசாலை கட்டிடம் ஒன்று பராமரிக்கப்பட்டு வருகின்றது.

வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை தாக்குதலாளிகள் கட்டிடத்தின் மீது மோதவிட்டு அது வெடித்து சிதறியதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தாக்குதலில் 27 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தானில் தலிபான்களை ஆதரிக்கும் இஸ்லாமிய ஆயுத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படுகிறது.

Exit mobile version