Site icon Tamil News

பண்டாரவளையில் மண் சரிவு – பலரை காணவில்லை

பண்டாரவளை, புனகல வட்டே, கபரகல பகுதியில் மண் மேடு சரிந்து விழுந்ததில் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.

உயிரிழந்தவர்களில் 6 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

காணாமல் போன இருவரை தேடும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அனர்த்தத்தில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்துள்ள நிலையில், மீட்பு பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்  வெளியாகியுள்ளது.

Exit mobile version