Site icon Tamil News

நைஜீரியாவில் அரசு ஊழியர்கள் சென்ற பஸ் மீது மோதிய ரயில்; 6 பேர் பலி!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தின் தலைநகர் இகேஜாவில் இருந்து அரசு ஊழியர்களை ஏற்றிக் கொண்டு ஒரு பஸ் புறப்பட்டுள்ளது. இந்த பஸ் அங்குள்ள ஆளில்லா ரெயில்வே கேட்டை கடக்க முற்பட்டது.

ஆனால் அப்போது அங்கு ஒரு ரெயில் வந்து கொண்டிருந்தது அதனை பஸ் டிரைவர் கவனிக்காமல் சென்றதால் பஸ் மீது ரெயில் வேகமாக மோதியது. இதில் தண்டவாளத்தில் இருந்து பஸ் தூக்கி வீசப்பட்டது.

இந்த கோர விபத்தில் 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 84 பேரை மீட்டு சிகிச்சைக்காக  வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

 

Exit mobile version