அரசியலமைப்பு பேரவையின் விசேட கூட்டமொன்று நாளை (1) நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாளை முற்பகல் 10.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அவரது அலுவலகத்தில் குறித்த கூட்டம் நடைபெறவுள்ளது.
சுயாதீன ஆணைக்குழுக்களை நியமித்தல் உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து இங்கு கலந்துரையாடப்பட உள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.