Site icon Tamil News

நான் ஜனாதிபதியாகத் தேர்வாகியிருந்தால் ரஷ்ய-உக்ரேன் போர் ஏற்பட்டிருக்காது என்கிறார் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்

நான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் புட்டினுடன் பேசி வெறுமனே 24 மணித்தியாலத்தில்  போரை நிறுத்தச்செய்வேன் என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவை சீனாவின் கைகளுக்குள் தூக்கிக் கொடுத்ததே பைடன் தான் என்றும், அத்துடன் தான் ஜனாதிபதியாக  இருந்திருந்தால் ரஷ்ய-உக்ரைன் போரே ஏற்பட்டிருக்காது என்றும், ஏன் என்றால் தான் என்ன சொன்னாலும் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் அதனைக் கேட்பார் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, 2024 ஆம் ஆண்டு தான் அமெரிக்காவின் ஜனாதிபதியானால்  அமெரிக்காவிற்கு மட்டுமல்ல உலகிற்கே பல நன்மைகள் கிடைக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

Exit mobile version