Site icon Tamil News

நாடுவானி உடைந்த விமானத்தின் கண்ணாடி!! கொழும்பில் அவசரமாக தரையிறக்கம்

டுபாய் நோக்கி பயணித்த இலங்கை விமானம் ஒன்று விமானத்தின் முன் கண்ணாடி வெடித்ததால் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை 6.25 மணிக்கு புறப்பட வேண்டிய இந்த விமானம் மோசமான வானிலை காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து இன்று (08) காலை 9.30 மணியளவில் புறப்பட்டது.

எவ்வாறாயினும், கண்ணாடி வெடித்ததன் காரணமாக, சுமார் ஒரு மணித்தியாலம் 10 நிமிடங்களின் பின்னர் மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விமானத்தில் 189 பயணிகள் மற்றும் 15 பணியாளர்கள் பயணம் செய்துள்ளனர். இந்த விமானம் இன்று பிற்பகல் துபாய்க்கு புறப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விமானம் இந்தியாவை அண்மித்து பயணித்துக்கொண்டிருந்த வேளையில், கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டுள்ளமை அவதானித்த, விமானி, கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அறிவித்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், மாற்று விமானத்தின் ஊடாக பயணிகள் டுபாய்க்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Exit mobile version