Site icon Tamil News

நடுவானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி

பறந்து கொண்டிருந்த விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி பற்றிய செய்தி அமெரிக்காவில் இருந்து வருகிறது.

விமான ஊழியர் ஒருவர் அந்த முயற்சியை முறியடிக்க முயன்றதாகவும், பயணி ஒருவர் விமான ஊழியர் மீது உடைந்த உலோக கரண்டியால் தாக்கியதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

பாஸ்டன் லோகன் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் தரையிறங்கியதும் அமெரிக்க போலீசார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பில் 33 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து பாஸ்டன் நோக்கிச் சென்ற விமானத்தில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. விமானம் தரைறிங்க 45 நிமிடங்கள் இருந்த போது பயணி இந்த செயற்பாட்டை மேற்கொணடதாக கூறப்படுகின்றது.

 

Exit mobile version