வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் தனது திருமண விழாவில் துப்பாக்கியால் சுட்ட பெண்ணை பொலிசார் தேடி வருவதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் காணொளியில் அந்த பெண் தனது கணவரின் அருகில் அமர்ந்து நான்கு ரவுண்டுகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுடுவதைக் காட்டுகிறது.
சம்பவத்தில் இருந்து காணாமல் போன பெண் மீது வழக்கு பதிவு செய்துள்ளதாக உள்ளூர் பொலிசார் தெரிவித்தனர்.