Site icon Tamil News

டொராண்டோவில் பெரும் திருட்டு நடவடிக்கையில் ஈடுட்ட பெண் கைது

கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள வணிகங்களில் இருந்து 79 point of sale (POS) terminals திருடப்பட்டது தொடர்பாக ஒரு டொராண்டோ பெண் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பின்னர் இதனை கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளில் போலியான பணத்தைத் திரும்பப்பெற பயன்படுத்தியதாக புலனாய்வாளர்கள் கூறுகின்றனர்.

POS டெர்மினல்கள் அக்டோபர் 30, 2022 மற்றும் ஏப்ரல் 1, 2023 க்கு இடையில் பல்வேறு வணிகங்களில் திருடப்பட்டதாக காவல்துறை கூறுகிறது.

37 வயதான Crystalee Hollihan, ஏப்ரல் 1, 2023 அன்று கைது செய்யப்பட்டார் என்பதுடன், 5,000 டொலருக்கும் அதிகமான உடமைகளை வைத்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார்.

மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

POS  தொலைந்து போன அல்லது திருடப்பட்ட POS  டெர்மினல்கள் மற்றும் மோசடியான பரிவர்த்தனைகளின் சம்பவங்கள் குறித்து காவல்துறையிடம் புகார் அளிக்குமாறு வணிகங்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றன என்று காவல்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

Exit mobile version