Site icon Tamil News

ஜனாதிபதி உரை மீது 3 நாள் விவாதம் வேண்டும் – சஜித் கோரிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்த கருத்து தொடர்பாக மூன்று நாட்கள் விவாதம் நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.

இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றும்போதே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இது தொடர்பான விவாதத்தை அடுத்த அமர்வில் நடத்துமாறும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுக் கொண்டுள்ளார்

Exit mobile version