Site icon Tamil News

இறக்குமதி செய்யப்படும் மா மற்றும் சீனியின் விலை அதிகரிப்பு!

இறக்குமதி செய்யப்படும் கோதுமை மா, மற்றும் சீனிக்கான விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

மா, மற்றும் சீனிக்கான சுங்க வரி சலுகை நீக்கப்பட்டுள்ளதால், அதன் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இன்று முதல், அமுலாகும் வகையில்,   ஒரு கிலோ கிராம் கோதுமை மாவின் விலையை 10 ரூபாவால் அதிகரிப்பதாக அத்தியாவசிய உணப்பொருள் இறக்குமதியாளர் சங்கம் அறிவித்துள்ளது.

இது குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள  நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய,  கோதுமை மாவுக்கு 3 ரூபாவால் சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது.

எனினும் மீண்டும் அதனை அறவிடத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் இதனை அடிப்படையாகக் கொண்டு மாவின் விலையை அதிகரிப்பதற்கான தேவை கிடையாது.

அத்தோடு தற்போது டொலரின் பெறுமதியும் குறைவடைந்துள்ளது. எனவே கோதுமை மா விலை அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் இல்லை என்று தெரிவித்திருந்தார்.

இதேவேளை இறக்குமதி செய்யப்படும் சீனியின் விலையும் 25 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version