Site icon Tamil News

செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டம்

கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் ஊதிய உயர்வு கோரி நேற்று முதல் 72 மணி நேர தொடர் போராட்டத்தை தொடங்கியிருந்தனர்.

இந்த போராட்டத்தின் கோரிக்கைகளாக தொழிலாளர் சட்டங்களை அமல்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.

அந்த மருத்துவமனைகள் செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று 50% ஊதிய உயர்வுக்கு ஒப்புதல் அளித்ததால் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இருப்பினும் மீதமுள்ள மருத்துவமனையைச் சேர்ந்த செவிலியர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அந்த நிர்வாகங்கள் ஊதிய உயர்வு தொடர்பாக இன்னும் எந்த தெளிவான முடிவும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

Exit mobile version