Site icon Tamil News

இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் பற்றிய அப்டேட்

இந்தியாவின் முன்னணி IT நிறுவனங்கள் அனைத்தும் பல பிரச்சனைகளுக்கு மத்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது .

இந்த நிலையை விரைவில் மாற்ற வேண்டும் என்பதற்காக அனைத்து முன்னணி IT நிறுவனங்களும் இரு முக்கியமான விடயங்களை இலக்காக கொண்டு இயங்க முடிவு செய்துள்ளது.

IT நிறுவனங்கள் மீதான நம்பிக்கை முதலீட்டாளர்கள் மத்தியில் அதிகளவில் குறைந்துள்ளது. இந்த நிலையை மாற்ற IT நிறுவனங்கள் விரைவாக செயல்பட முடிவு செய்துள்ளது.

இதற்காக IT நிறுவனங்கள் தனது லாபத்தின் மார்ஜின் அளவை அதிகரிக்கவும், ஊழியர்களை அதிகளவில் பயன்படுத்தவும் முக்கிய இலக்காக கொண்டு உள்ளது.

இவ்விரண்டையும் பூர்த்தி செய்தால் தேவைக்கு அதிகமாக இருக்கும் ஊழியர்களை குறைக்க வழிவகை செய்வது மட்டும் அல்லாமல் ஊழியர்களின் செயல்திறனை முழுமையாக பெற முடியும். இதேவேளையில் மார்ஜின் அளவுகளை உயர்த்துவதன் மூலம் நிறுவனத்தின் நிதிநிலை மேம்படும் மற்றும் இதனால் தானாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை திரும்ப பெற முடியும் என நம்புவதாக தெரிவிக்கப்படுகின்றது .

 

Exit mobile version