Site icon Tamil News

சீனாவில் கப்பல் கட்டும் தளத்தில் தீவிபத்து : ஏழுபேர் பலி!

சீனாவில் ஹூபே மாகாணத்தின் சாங்சியாங் நகரில் உள்ள கப்பல் கட்டும் தளத்தில் இடம்பெற்ற தீவிபத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து  தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற தீயணைப்பு படையினர் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர்.

இந்த விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தனர். 5 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version