Site icon Tamil News

சிங்கப்பூரில் ரயில் தண்டவாளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்த பெண்

சிங்கப்பூர் – பொங்கோல் ஈஸ்ட் LRT ரயில் பாதையில் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாக சிங்கப்பூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதுப் பெண் நேற்றிரவு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Cove நிலையத்தில் உள்ள தண்டவாளத்தில் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

நிலையத்தில் ஏற்பட்ட எதிர்பாரா சம்பவத்தால் பொங்கோல் வட்டாரத்தின் LRT சேவைகள் நிறுத்தப்பட்டதாக இரவு 10.30 மணி வாக்கில் SBS Transit நிறுவனம் Twitterஇல் அறிவித்தது.

சம்பவ இடத்துக்குச் சென்ற சிங்கப்பூர்க் குடிமைத் தற்காப்புப் படையினர் பெண்ணின் மரணத்தை உறுதிப்படுத்தினர்.

தொடக்கக் கட்ட விசாரணையில் கொலைக்கான சந்தேகம் இல்லை என்று காவல்துறை குறிப்பிட்டது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன.

 

Exit mobile version