Site icon Tamil News

சிங்கப்பூரில் தூங்க மறுத்த குழந்தைக்கு நடந்த கொடூரம்

சிங்கப்பூரில் தூங்க மறுத்த குழந்தையை கடித்த இல்லப் பணிப்பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆத்திரத்தில் செய்த செயலுக்காக அந்த பெண்ணுக்கு 6 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

14 மாதக் குழந்தை மாலையில் தூங்க மறுத்ததால், 33 வயது இந்தோனேசியப் பணிப்பெண் கோபமடைந்துள்ளார்.

இதனால் குழந்தையின் இடக் கையில் கடித்தார். கடந்த ஆண்டு (2022) மே மாதம் சம்பவம் நடந்தது.

குழந்தையின் கையில் காயம் இருந்ததைக் கண்ட தாயார் அது பற்றிப் புகார் செய்தார்.

அந்தப் பணிப்பெண்ணுக்குக் குழந்தை வதைக் குற்றத்துக்காக, 8 ஆண்டுவரை சிறைத்தண்டனை அல்லது 8 ஆயிரம் வெள்ளி வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்பட்டிருக்கலாம்.

Exit mobile version