Site icon Tamil News

சகல தேர்தல்களையும் எதிர்கொள்ள தயார் – மஹிந்த அறிவிப்பு!

எந்த நேரத்திலும்,  எந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த பொதுச்சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,  கட்சி தீர்மானத்துக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார் ஏனைய பதவிகளில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை.தற்போதைய பதவி நிலையே தொடரும் என்றார்.

கட்சியின் யாப்புக்கு அமைய புதிய தவிசாளர் ஒருவரை நியமிக்க முடியாது என பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார் என ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பினார்கள்.இதற்கு பதிலளித்த அவர் சுயாதீனமற்றவர் என்றார்.

அத்துடன் எந்த நேரத்திலும்இஎந்த தேர்தல் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம்.கட்சி என்ற ரீதியில் சகல சவால்களையும் எதிர்கொள்வோம் என்றார்.

Exit mobile version