Site icon Tamil News

கெர்சனின் ஒப்லாஸ்ட் பகுதி மீது 301 குண்டுகளை வீசி தாக்குதல் நடத்திய ரஷ்யா!

கெர்சனின் ஒப்லாஸ்ட் பகுதி மீது ரஷ்யா 301 குண்டுகளை வீசி தாக்குதல்களை மேற்கொண்டதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இதன்படி கடந்த 24 மணி நேரத்தில், தெற்கு கெர்சன் பகுதியை நோக்கி 67 முறை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனரக பீரங்கி, மற்றும் கிராட் மல்டிபிள் ரொக்கெட் லாஞ்சர்களில் இருந்து 301 குண்டுகள் வீசப்பட்டதாக சுறப்படுகிறது.

கெர்சனில் மாத்திரம் ஏழு முறை செல் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குடியிருப்பு கட்டங்களை நோக்கி 23 குண்டுகள் வீசப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

முன்னதாக உக்ரைன் அதிகாரிகள் கெர்சன் பகுதிகளில் இருந்து பொதுமக்களை வெளியேற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version