Site icon Tamil News

குளியாப்பிட்டிய இளைஞன் கொலை – பொலிஸ் பிடியில் சிக்கிய காதலி

குளியாப்பிட்டிய, இலுகென பிரதேசத்தில் இளைஞன் ஒருவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் இளைஞன் ஒருவரின் காதலியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குளியாப்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த குறித்த இளைஞன் கடந்த ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி தனது காதலியை பார்ப்பதற்காக குளியாப்பிட்டிய, வஸ்ஸுல்ல பிரதேசத்திற்கு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அங்கு காணாமல் போன இளைஞனின் சடலம் சில தினங்களின் பின்னர் ஹலவத்த மாதம்பே பிரதேசத்தில் கண்டெடுக்கப்பட்டது.

குறித்த யுவதி குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு சம்பவம் தொடர்பில் நீண்ட நேரம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலைக்கு உதவிய மற்றும் குற்றத்தை மறைத்த குற்றச்சாட்டின் பேரில் குறித்த இளைஞனின் காதலி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

18 வயதுடைய குறித்த யுவதி இலுகேன, வஸ்ஸவுல்ல பிரதேசத்தில் வசிப்பவராவார்.  சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குளியாபிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version