கனடாவில் தனது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டை எதிர்கொள்ளும் தமிழர் மீதான வழங்கு எதிர்வரும் 3ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் திகதி ஸ்காப்ரோவில் 38 வயதான தீபா சீவரத்தினம் என்பவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண்ணின் தாய் படுகாயமடைந்தார்.
இந்த சம்பவம் தொடர்பில் மூவர் மீது முதல்நிலை கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. இதன்படி, உயிரிழந்த பெண்ணின் கணவர் மீதான விசாரணைகள் எதிர்வரும் 3 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.