Site icon Tamil News

கடத்தப்பட்டதாக கூறப்படும் குழந்தைகளை கண்டறிய புதிய செயலியை அறிமுகப்படுத்தியது உக்ரைன்!

கடத்தப்பட்டதாகக் கூறப்படும் குழந்தைகளைக் கண்டறிய உக்ரைன் புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது

இதன்படி  ரஷ்யாவிற்கு நாடு கடத்தப்பட்ட 19,000 குழந்தைகளைக் கண்டறிய உதவும் வகையில்,  ரீயூனைட் உக்ரைன், என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியானது  அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனமான Find My Parent உடன் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது, மோதலால் பிரிந்த குடும்பங்களை இணைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள உக்ரேனிய தேசிய காவல்துறையின் துணைத் தலைவர் ஒலெக்சாண்டர் ஃபாட்செவிச் குடும்பத்தினை மீள் இணைப்பதற்கு இது உதவியாக இருக்கும் எனத் தெரிவித்தார்.

செயலியில் உள்ள தனிப்பட்ட சுயவிவரங்களைச் சரிபார்த்து உறுதிப்படுத்தவும், அவற்றுக்கிடையே இடைத்தரகராகச் செயல்படவும் காவல்துறை உத்தேசித்துள்ளது.

Exit mobile version