Site icon Tamil News

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை போல் தெளிவான பாதையில் துணிச்சலான முடிவுடன் எடப்பாடி பழனிசாமி செயல்படுவார்.

எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் அறிவிக்கப்பட்ட நிலையில் கல்வெட்டில் அவசர அவசரமாக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனி சாமி என பெயர் மாற்றம்.

எடப்பாடி பழனிசாமி பொது செயலாளராக தேர்வு செய்யப்பட்டது செல்லும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில் தமிழகம் முழுவதும் அதிமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக சென்னை அடுத்த பல்லாவரம் பேருந்து நிலையம் அருகே அதிமுக பகுதி கழக செயலாளர் ஜெயபிரகாஷ் தலைமையில் பொதுச்செயலாளர் என பெயர் பதித்த கல்வெட்டு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

அப்போது அங்கு நிறுவப்பட்ட அதிமுக கொடிக்கம்பத்தில் அதிமுக கொடியை  முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் அதுமுக மாவட்ட கழக துணைச்செயலாளருமான. ப.தன்சிங்  கொடியை ஏற்றினார்.

பின்பு பட்டாசுக்களை வெடித்தும் அங்கு இருந்த பொதுமக்களுக்கும் இனிப்புகள் வழங்கி   கொண்டாடினர். இந்த நிகழ்ச்சியில் அதிமுகவை சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

Exit mobile version