Site icon Tamil News

எதிர்கட்சி தலைவர் சஜித்தின் உயிருக்கு ஆபத்து!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடக்கூடாது என்பதற்காக, சிலக் குழுக்கள் தன்னுடையஉயிருக்கு தீங்கு விளைவிக்க முயற்சிக்கலாம் என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

கிரிந்தி ஓயாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “ ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என பிடிவாதம் பிடிப்பவர்கள் தம்மை கொலை செய்யும் முயற்சியின் பின்னணியில் இருக்கலாம்.

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் போட்டி வேட்பாளராக நான் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று சிலர் வலியுறுத்தி வருகின்றனர். உயிருடன் இருந்தால் போட்டியிடுவேன்.

தேர்தல் நடக்கும் நேரத்தில் உயிருடன் இருந்தால் மட்டுமே என்னால் போட்டியிட முடியும். எனவே, நான் போட்டியிட மாட்டேன் என்று அவர்கள் வற்புறுத்தும்போது எனது உயிருக்கு ஆபத்தில் உள்ளதா என்று எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது” எனக் கூறியுள்ளார்.

Exit mobile version