Site icon Tamil News

உலக வங்கியின் மூத்த எரிசக்தி நிபுணர்களுடன் எரிசக்தி அமைச்சர் பேச்சுவார்த்தை

இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சனா விஜேசேகர இன்று  உலக வங்கியின் சிரேஷ்ட எரிசக்தி நிபுணர்களை சந்தித்துள்ளார்.

புதிய மின்சார சட்டத்தை உருவாக்குவதற்கும் இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும் மின்துறை சீர்திருத்தங்கள் தொடர்பான தொழில்நுட்ப உதவிகளின் முன்னேற்றம் கலந்துரையாடலின் போது எடுக்கப்பட்டதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.

“உலக வங்கியின் மூத்த எரிசக்தி நிபுணர்களை இன்று காலை சந்தித்தேன். புதிய மின்சாரச் சட்டத்தை உருவாக்குவதற்கும், இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை வலுப்படுத்துவதற்கும் மின்சாரத் துறை சீர்திருத்தங்களுக்கான தொழில்நுட்ப உதவியின் முன்னேற்றம் குறித்து கலந்துரையாடப்பட்டது” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

Exit mobile version