Site icon Tamil News

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : விசாரணைக்கு வரும் ரிட் மனு!

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பில் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையினால் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனு மீதான விசாரணை மே மாதம் 9 ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்படும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

சோபித்த ராஜகருணா மற்றும்  தம்மிக்க கனேபொலகே ஆகியோரைக் கொண்ட நீதியரசர் குழு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளனர்.

குறித்த தாக்குதல் தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவினால் சட்ட மா அதிபர் திணைக்களத்திற்கு விடுக்கப்பட்ட பரிந்துரைகளை செயற்படுத்துமாறு மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை மேற்படி ரிட் மனுவை தாக்கல் செய்திருந்தார்.

உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல் தொடர்பிலான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையில் பொலிஸார் சிலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் இது தொடர்பில் எவ்வித செயற்பாடுகளும், எடுக்கப்படாமல் இருப்பதாக மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றிடம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version