இலங்கை தமிழர்களுக்கு 223 கோடி ரூபாய் பொருட் செலவில் வீடுகள் கட்டிக்கொடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக சட்டசபையில் 2023 – 2024ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் வரவு செலவுத்திட்டத்தினை நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
இதன்போது பல்வேறு துறைகளுக்கான நிதி ஒதுக்கீடு குறித்து அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், இலங்கை தமிழர்களுக்காக 3949 வீடுகள் 223 கோடி செலவில் கட்டப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.