Site icon Tamil News

இலங்கையில் பல ஆண்டுகளுக்குப் பின்னர் பரவிய தொற்று – ஒருவர் பலி

இலங்கையில் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

பல ஆண்டுகளுக்குப் பின்னர் மலேரியாவினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

மாணிக்கக்கல் தொடர்பான வர்த்தக நோக்கத்துக்காக  தன்சானியாவுக்குச் சென்று திரும்பிய களுத்துறை பேருவளை சீனன்கோட்டை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் நேற்று தெரிவித்தன.

அவர் ஏப்ரல் 10 ஆம் திகதி  அன்று இலங்கைக்குத் திரும்பினார். பின்னர் நான்கு நாட்கள் காய்ச்சலுடன் தனது வீட்டில் இருந்தார். ஏப்ரல் 14 ஆம் திகதி தனியார் வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்ட அவர் ஏப்ரல் 15  ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதேவேளை, இலங்கையில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் மலேரியா பாதிப்புக்குள்ளான நாடுகளிலிருந்து திரும்பி வருபவர்களை பரிசோதிப்பதற்கான சரியான பரிசோதனை திட்டம் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version