Site icon Tamil News

இலங்கையில் கார் இறக்குமதி தொடர்பில் வெளியான தகவல்

இலங்கையில் அனுமதி கிடைக்கும் போதெல்லாம் மின்சார கார்களை மட்டுமே இலங்கைக்கு இறக்குமதி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டுத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்கள் இந்த நாட்டிற்கு அனுப்பும் அந்நியச் செலாவணித் தொகைக்கு ஏற்ப மின்சார கார்களை இறக்குமதி செய்யும் வசதியை ஏற்படுத்த அரசு முடிவு செய்தது.

இதற்கு அமைச்சரவை முழுமையாக ஆதரவளித்தது. இதில் ஹைபிரிட் கார்களுடன் சேர்த்து பெற்றோல் கார்களை இறக்குமதி செய்ய அனுமதிக்க சில அமைச்சர்கள் முன்மொழிந்தனர்.

எதிர்காலத்தில் நாம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கி செல்ல வேண்டும். நாம் மின்சார வாகனங்களுக்கு செல்ல வேண்டும். அதனால்தான் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டது.

இந்த நாட்டில் அரசாங்கம் என்ற வகையில், முடிந்தவரை மின்சார வாகனங்களை மட்டுமே இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற முடிவில் உள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version