Site icon Tamil News

இந்தியாவில் வணிக கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலியாகினர்

தென்னிந்திய நகரமான ஹைதராபாத்தில் உள்ள பல மாடி வணிக வளாகத்தில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தில் குறைந்தது 6 பேர் உயிரிழந்துள்ளதாகவும்  மற்றும் 6 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆறு பேரில்,  இரண்டு ஆண்கள் மற்றும் நான்கு பெண்கள்  தீயில் சிக்குண்டு உயிரிழந்துள்ளனர்.

மேலும் காயமடைந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயமடைந்த ஆறு பேரில் நான்கு பேர் தீயில் இருந்து தப்பிப்பதற்காக வளாகத்திலிருந்து குதித்துள்ளனர்.

தீயை அணைக்க 12 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்தன மற்றும் வெள்ளிக்கிழமை அதிகாலை வரை தீயை அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version