Site icon Tamil News

இந்தியாவில் யாசகத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரிப்பு

இந்தியாவில் தமிழகத்தில் யாசகத்தில் குழந்தைகள் ஈடுபடுத்தப்படுவது அதிகரித்து வருவதாகவும், இது நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மதுரையில் மட்டும் 5 ஆண்டுகளில் 113 குழந்தைகள் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மதுரை மாவட்டத்தில் கடந்த 2018 ஆண்டு 4 குழந்தைகளும், 2020 ஆண்டு 15 குழந்தைகளும், 2021 ஆண்டு 38 குழந்தைகளும், 2022 ஆண்டு 56 குழந்தைகளும் என மொத்தம் 113 குழந்தைகள் மீட்கபட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மதுரை மாநகர் பகுதியில் அதிக அளவு பிச்சை எடுக்கும் குழந்தைளை மீட்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு மூலம் சிறப்புக் குழு நியமித்து குழந்தைகளை வைத்து பிச்சை எடுக்க வைக்கும் கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குழந்தைகளை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 

Exit mobile version