Site icon Tamil News

பாலியல் தொல்லைகள் மற்றும் கொடுமைகளுக்கு எதிராக கலாஷேத்திராவில் மாணவிகள் போராட்டம்

சென்னையிலுள்ள கலாஷேத்திராவின், ருக்குமணி தேவி நுண்கலை கல்லூரியிலுள்ள மாணவிகளுக்கு அங்குள்ள ஆசிரியர்கள் சிலரால் பாலியல் தொந்தரவு மேற்கொள்ளப்படுவதாக கடந்த ஆண்டு பரதநாட்டிய கலைஞர் லீலா சாம்சன் தனது முகநூலில் பதிவிட்டார்

என்பதும், கல்லூரி பணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட விசாரணை குழு குற்றச்சாட்டு ஆதாரமற்றவை என கூரியிருந்ததை அடுத்து இது பாரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக இந்த செயற்பாடு குற்றவாளியை தப்பிக்க விடும் செயலா என சந்தேகத்தை எழுவதாகவும் பலரால் விமர்சிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த விசாரணைகுழுவில் மாணவர் பிரதிநிதி எவரேனும் இருந்ததாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்தி நீதிபெற்றுதர வேண்டி தமிழக முதல்வருக்கு மாணவிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து தமிழக மகளிர் ஆணையம் இன்று மாணவிகளிடம் விசாரணை நடத்தவுள்ளது.

Exit mobile version