Site icon Tamil News

ஆஸ்திரேலியாவில் கோர விபத்து – பெண் உட்பட நால்வர் பலி

ஆஸ்திரேலியா – வடக்கு கான்பராவில் நெடுஞ்சாலையில் இடம்பெற்ற கார் விபத்தில் 04 பேர் உயிரிழந்துள்ளனர்.

இன்று காலை 06.45 அளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் பெண் ஒருவரும் 03 ஆண்களும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்த மற்றொரு நபர் சிகிச்சைக்காக விமானம் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு ஆஸ்திரேலிய வாகன ஓட்டிகளை கூடுதல் கவனத்துடன் வாகனம் ஓட்டுமாறு போலீசார் எச்சரித்துள்ளனர்.

உல்லாசப் பயணம், பயணங்களில் பலர் ஈடுபட்டு வருவதால் சாலைகளின் பயன்பாடுதான் இதற்குக் காரணம்.

Exit mobile version