ஆஸ்திரேலியாவில் தொலைதூரப் பகுதி ஒன்று வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளானது.
ஆஸ்திரேலியாவின் வடக்கில் இருக்கும் பகுதி ஒன்றிலேயே இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
அதைச் சேர்ந்த சிறுவனை ஒருவரை முதலை கடித்து அவர் மருந்தகத்தில் சிகிச்சை பெற்றதாக தெரியவந்துள்ளது.
முதலையால் தாக்கப்பட்ட சிறுவனுக்கு 17 வயதாகின்றது. வெள்ளம் காரணமாக முதலைகள் தங்களது இருப்பிடத்தை இழந்துள்ளன.
ஆகையால் முதலைகளால் மக்களுக்கு அபாயம் நேரிடலாம் எனக் கூறப்படுகிறது.
அதனைக் கருத்தில் கொண்டு மக்கள் கவனத்துடன் இருக்குமாறு அரசாங்க அமைச்சர் கேட்டுக்கொண்டதாக செய்தி நிறுவனம் தெரிவித்தது.