Site icon Tamil News

ஆன்மீக குரு பங்காரு அடிகளார் பிறந்தநாளை முன்னிட்டு இலவச கண் சிகிச்சை முகாம்

செங்கல்பட்டு மாவட்டம்
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி மருத்துவமனையில் ஆன்மீக குரு பங்காரு அடிகளார் 83-வது பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு இலவச
கண் சிகிச்சை முகாம் மற்றும் கண் கண்ணாடிகள் வழங்கும் நிகழ்ச்சி செங்கல்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் ராகுல்நாத் தலைமையில் நடைபெற்றது.

இதில் சிறப்பு விருந்தினராக ஆன்மீக இயக்க தலைவர் லஷ்மி பங்காரு அடிகளார்,சென்னை சங்கரா நேத்ராலயா
கண் மருத்துவமனையின் மருத்துவர் மருத்துவமனையின் இயக்குனருமான மீனாபாஸ்கர்,
ஆதிபராசக்தி மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் டாக்டர் ரமேஷ், ஆகியோர் கலந்து கொண்டு கண் அறுவை சிகிச்சை செய்த 600- க்கும் மேற்பட்டோருக்கு இலவச கண் கண்ணாடிகளை வழங்கினர்.

இம்முகாமில் மேல்மருவத்தூர் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். அவர்களுக்கு மருந்து மாத்திரைகள் தங்குமிடம் உணவு மற்றும் கண் கண்ணாடிகள்
இலவசமாக வழங்கப்பட்டது.

Exit mobile version