Site icon Tamil News

அஸ்வெசும திட்டம் : டிசம்பர் மாதத்திற்கான பணம் வைப்பிலிடப்பட்டுள்ளது!

பயனாளி குடும்பங்களுக்கான டிசம்பர் தவணையை செலுத்துவதற்காக 8,700 மில்லியன் ரூபா வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

பயனாளி குடும்பங்களின் எண்ணிக்கை 1,410,064 ஆகும். இதன்படி, கடந்த ஜூலை முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியில் பயனாளி குடும்பங்களுக்கு செலுத்தப்பட்ட மொத்தத் தொகை 51,967 மில்லியன் ரூபாவாகும்.

303,199 மிகவும் ஏழ்மையான குடும்பங்கள், 606,496 ஏழைக் குடும்பங்கள், 290,624 பாதிக்கப்படக்கூடிய குடும்பங்கள் மற்றும் 209,745 இடைநிலைக் குடும்பங்களுக்கு தற்போது நிவாரணப் பலன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Exit mobile version