Site icon Tamil News

அமெரிக்காவில் 100,000க்கும் அதிகமான சிறார்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!

அமெரிக்காவில் கடந்த 4 வாரங்களில் 106,000க்கும் அதிகமான சிறார்களுக்கு கொரோனா நோய்க்கிருமி தொற்றியிருப்பதாக American Academy of Pediatrics அமைப்பும் சிறார் மருத்துவமனைச் சங்கமும் இதனை தெரிவித்துள்ளன.

கொரோனா பரவத்தொடங்கியதிலிருந்து அமெரிக்காவில் சுமார் 15.5 மில்லியன் சிறார்கள் அத்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளளனர். அந்தத் தகவலை Bernama வெளியிட்டிருக்கிறது.

கடந்த 5 மாதங்களில் சிறார்களைப் பாதித்த கொரோனா சம்பவங்களின் வாராந்திர எண்ணிக்கை சுமார் 32,000 உயர்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

இன்னும் நிறையத் தரவுகளைத் திரட்ட வேண்டியிருப்பதாகவும் அமைப்பு கூறியது.

Exit mobile version