Site icon Tamil News

அமெரிக்காவில் புயல் தாக்கியதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது

அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய மேற்குப் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் பலத்த மழையுடன் கூடிய புயல் தாக்கம் ஏற்பட்டுள்ளதாகவும், இதில் குறைந்தது 22 பேர் உயிரிழந்திருக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இந்த அனர்த்தத்தில் பலர் காயமடைந்தனர் என்றும் அந்நாட்டு அதிகாரிகள் மற்றும் ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தேசிய வானிலை சேவை, அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எச்சரித்தது,

இதன் விளைவாக மின்சாரம் துண்டிக்கப்படலாம்  எனவும் மற்றும் 60 mph (100 kph) வேகத்தில்  வீசக்கூடும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

 

Exit mobile version