Site icon Tamil News

அந்தமானில் சிக்கியுள்ள நான்கு இலங்கை மீனவர்களை மீட்குமாறு கோரிக்கை!

அந்தமானில் சிக்கியுள்ள நான்கு இலங்கை மீனவர்களை மீட்குமாறு சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட்டிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – கல்குடா பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த நான்கு மீனவர்களும், இயந்திரக் கோளாறு காரணமாக  கடலில் தத்தளித்த நிலையில், அந்தமான் தீவில் தங்கி நின்று ஆறு மாதங்களுக்கு மேலாகிவிட்டது.

இந்நிலையிலேயே குறித்த நால்வரையும் மீட்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version