மேற்கு இந்தியாவில் இசைக்கலைஞர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன், 29 பேர் காயமடைந்துள்ளனர்.
புனே நகரத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள இந்தியாவின் நிதித் தலைநகரான மும்பைக்கு பயணித்த பேருந்தே விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த பேருந்து நெடுஞ்சாலையில் பயணித்த போது தவறி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த விபத்து குறித்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததோடு, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணம் அறிவித்துள்ளார்.